உள்ளூர் செய்திகள் (District)
- போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கைதானவர்களிடம் இருந்து ரூபாய் 264 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஊத்தங்கரை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தருமபுரி ெரயில்வே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்த ராஜி, போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், கிருஷ்ணகிரி டவுன் பாரதியார் நகரை சேர்ந்த சீனிவாசன், ஓசூர் அட்கோ பகுதியை சேர்ந்த ராமசாமி, மகாதேவன், தேன்கனிக்கட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சலீம், ராயக்கோட்டை ரஹ்மான் காலனி சேர்ந்த முருகன், கெலமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூபாய் 264 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.