தூத்துக்குடியில் நள்ளிரவில் விபத்து -வாகனம் மோதி வளையல் வியாபாரி பலி
- உலகமணி நேற்று இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று உலகமணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந் தவர் உலகமணி (வயது58).
வளையல் வியாபாரி
இவர் மோட்டார் சைக்கிள் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வளையல் வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை-தூத்துக்குடி பாலப்பணிகள் நடைபெறும் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உலகமணி மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.