உள்ளூர் செய்திகள் (District)

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2022-08-21 08:34 GMT   |   Update On 2022-08-21 08:34 GMT
  • சந்திரகுமாருக்கு அவருடன் வேலை பார்த்து வரும் சில தொழிலாளர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
  • போலீசார் படுகாயமடைந்த சந்திரகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது22). கட்டிட தொழிலாளி.

அரிவாள் வெட்டு

இவருக்கும் அவருடன் வேலை பார்த்து வரும் சில தொழிலாளர்களுக்ம் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை சந்திரகுமார் தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள யார்டு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் சந்திரகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

6 பேருக்கு வலைவீச்சு

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த சந்திரகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் முன்விரோதம் காரணமாக சக தொழிலாளிகள் சந்திர குமாரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அதன்பேரில் வேல்ராஜ், ருக்மன் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News