உள்ளூர் செய்திகள் (District)

குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

Published On 2023-04-01 09:49 GMT   |   Update On 2023-04-01 09:49 GMT
  • 17 வயது பெண்ணின் அனுமதி இல்லாமல் கடந்த வருடம் அங்கானம்புதூரை வேடியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
  • இருவருக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது பெண். இவருடைய அனுமதி இல்லாமல் இவருடைய பெற்றோர் கடந்த வருடம் அங்கானம்புதூரை வேடியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.இதனால் இருவருக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News