உள்ளூர் செய்திகள் (District)
பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே மருதக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாதுரான் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
மருதக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அம்மா செல்லம் தலைமை வகிக்தார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் வெங்கடே ஸ்வரி வரவேற்றார்.
ஆசிரியர் அல்லிராணி நன்றி கூறினார்.
மாதுரான் புதுக்கோட்டை யில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று எண்ணும், எழுத்தும் இயக்கத்தின் முக்கியத்துவம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.