உள்ளூர் செய்திகள் (District)

கடந்தை வண்டு கூடுகளை அகற்றும் தீயணைப்பு வீரர்கள்.

கடையம் அருகே கடந்தை வண்டு கொட்டி விவசாயி சாவு

Published On 2022-08-28 08:54 GMT   |   Update On 2022-08-28 08:54 GMT
  • மரத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் பாபநாசத்தை கொட்டியது.
  • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அதற்குள் பாபநாசம் இறந்துவிட்டார்.

நெல்லை:

கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபநாசம்(வயது 69). விவசாயி.

இவர் சம்பவத்தன்று ஊருக்கு அருகே உள்ள புளியந்தோப்புக்கு சென்று புளி பறித்துக்கொண்டிருந்தார். அப்போது மரத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் பாபநாசத்தை கொட்டியது. இதனால் வலியால் துடித்த அவரை, உறவினர்கள் அங்குள்ள ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அதற்குள் பாபநாசம் இறந்துவிட்டார். இதுதொடர்பாக கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள புளியமரங்களில் உள்ள கடந்தை கூடுகளை ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் தேடி கண்டுபிடித்து அகற்றி வருகின்றனர். 

Tags:    

Similar News