- ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.
- முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்காலடி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பி ரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் வெற்றிவேல், கொக்காலடி ஊராட்சி தலைவர் வசந்தன் முன்னிலையில் நடந்தது.
விழாவுக்கு ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜ சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியை செல்லத்தாய்க்கு நினைவு பரிசை தலைமை ஆசிரியர் அருள் அரசு வழங்கினார். ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் முன்னாள் மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
டெல்டா மாவட்டங்களில் சிறந்த சேவையாற்றி வரும் துரை ராயப்பன் மற்றும் ராஜ சரவணன் ஆகியோருக்கு கொக்காலாடி ஊராட்சி மன்றம் சார்பில் டெல்டா நாயகன் என்று விருது வழங்கப்பட்டது.
விழாவில் திரைப்பட புகழ் அகிலன் மேஜிக் செய்தார்.
முடிவில் ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.