மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி
- கிருஷ்ணகிரி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- சரவணகுமார், மகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் வேட்டியம்பட்டி சரவணன் தலைமையில், ஆட்டோ சங்க தலைவர் வடிவேல், நிர்வாகிகள் சரவணன், ஜெய்கிஷோர், சரண்ராஜ், சிவபாலன், பிரதாப், நிரேஷ், ராம், விஜய், மிதுன், சங்கர், கோபி, பாலாஜி, ஹரி, சத்தீஷ், தனுஷ், சரவணகுமார், மகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், ராஜேந்திரன், நாகோஜனஅள்ளி பேரூர் செயலாளர் தம்பிதுரை, நிர்வாகிகள் செந்தில், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.