உள்ளூர் செய்திகள்

காரைக்கால் நெடுங்காடு பகுதியில் தீ விபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்

Published On 2023-01-04 07:23 GMT   |   Update On 2023-01-04 07:23 GMT
  • கார்த்திகேசன் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
  • வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

புதுச்சேரி: 

காரைக்கால் அருகே நெடுங்காடு கூழ் குடித்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேசன். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகிலுள்ள குடும்பத்தார்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக் குமார் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். இருந்தும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சேதமானது. வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

விவரம் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கார்த்திகேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கார்த்திகேசன் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், இரண்டொரு நாளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 50,000 வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News