உள்ளூர் செய்திகள் (District)
இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு
- இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.
- கொம்பேரிமூக்கன் விஷ பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் குப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அரவிந்த் (வயது 21) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.
திரும்பி மீண்டும் வந்து இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டபோது 2 அடி நீளமுள்ள கொம்பேரிமூக்கன் விஷப் பாம்பு இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தில் இருந்த கொம்பேரிமூக்கன் விஷ பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.
இதனால் வாலிபர் நிம்மதியுடன் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.