உள்ளூர் செய்திகள் (District)
பென்னாகரத்தில் வீட்டில் புகுந்த பாம்பு
- வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது,
- பாம்பை ஓகேனக்கல் செக்போஸ்ட் அடுத்துள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் வசிப்பவர் பாலாஜி. இவரது வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது, இது குறித்து உடனடியாக பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தீயணைப்பு அலுவலர்கள் கேப்டன் ராஜ், சிதம்பரம், மாரியண்ணன், ராஜ்குமார், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜி வீட்டில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
உயிருடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பை ஓகேனக்கல் செக்போஸ்ட் அடுத்துள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.