உள்ளூர் செய்திகள் (District)

விஜய்யை பார்ப்பதற்காக மாநாட்டு திடலில் தாயுடன் விடிய விடிய காத்திருந்த மாணவி

Published On 2024-10-27 06:51 GMT   |   Update On 2024-10-27 06:51 GMT
  • திடலுக்குள் அனுமதிக்காததால் வெளியே காத்திருந்தனர்.
  • விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன்.

வேலூர் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவரது மகள் லாவண்யா அடுக்கம்பாறையில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நேற்று இரவு தாயும் மகளும் வேலூரில் இருந்து புறப்பட்டு மாநாட்டு திடலுக்கு வந்தனர்.

திடலுக்குள் யாரையும் அனுமதிக்காததால் திடலுக்கு வெளியே விடிய விடிய இருவரும் காத்திருந்தனர். இதுபற்றி லாவண்யா கூறியதாவது:-

எனக்கு விஜய்யை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.இதுவரை நேரில் பார்த்தது கிடையாது. எப்படியாவது இந்த முறை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் புறப்பட்டு வந்தோம். எங்கள் ஊரில் இருந்து என்னைப்போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள்.

கண்விழித்து விடிய விடிய காத்திருந்தது கஷ்டமாக தெரியவில்லை. எப்படியாவது இன்று விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். எனக்கு இப்போது 17 வயது ஆகிறது. வருகிற தேர்தலில் முதல் ஓட்டு போடுகிறேன். அதுவும் விஜய்க்கு போடப் போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News