உள்ளூர் செய்திகள் (District)
- வியாபாரி ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பொம்மைய கவுண்ட ன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
பாலமுருகன் ஜவுளிவி யாபாரம் செய்து வந்தார். மது போதைக்கு அடிமை யானதால் வயிற்றில் நீர்கட்டி ஏற்பட்டது. ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தார்.
இதனால் அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.