உள்ளூர் செய்திகள் (District)
நெல்லை சந்திப்பில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த திருநங்கை - கொலையா? போலீசார் விசாரணை
- திருநங்கை ஒருவர் தண்டவாளங்களுக்கு இடையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- இறந்து கிடந்த திருநங்கை யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் லெட்சுமி புரம் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் தண்டவாளங்களுக்கு இடையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து, சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த திருநங்கை யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.
அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொன்று வீசப்பட்டாரா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.