உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் கீழே விழுந்து சாவு

Published On 2023-04-29 09:54 GMT   |   Update On 2023-04-29 09:54 GMT
  • தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
  • வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, புலிகரை அருகே வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 28).

இவர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மாட்லாம்பட்டி அருகே குப்பங்கரை பகுதியை சேர்ந்த திருத்ரா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் தனது மனைவி அம்மாவிடான குப்பங்கரையில் சில நாட்கள் இருந்து வந்துள்ளார் நேற்று முன்தினம் வேலை முடிந்து மனைவியை பார்க்க வந்து சுபாஷ் சந்திரபோஸ் மாட்லாம்பட்டிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது மோட்டார் பைக்கில் மாட்லாம்பட்டி நோக்கி சென்றுள்ளார்.

அப்பொழுது சாலையில் இருந்த வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அவ்வழியில் சென்றவர்கள் செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News