உள்ளூர் செய்திகள்
குலசேகர நாதசுவாமி கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்சவ விழா
- வளைகாப்பு நிகழ்ச்சியையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
- தர்மஸம்வர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை குலசேகர நாதசுவாமி கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்சவ விழா நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான வளைகாப்பு நிகழ்ச்சியையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தர்மஸம்வர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்தார். பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டது.
அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வளைகாப்பு உத்சவ நிகழ்ச்சி நடைபெற்று. பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
முடிவில் பிரசாதத்துடன் வளையல்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டலதாரர்கள் செய்திருந்தனர்.