உள்ளூர் செய்திகள் (District)

வாடகை வீட்டில் கருக்கலைப்பு மையம் - சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் கைது

Published On 2024-06-29 06:48 GMT   |   Update On 2024-06-29 06:48 GMT
  • குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
  • சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தை அடுத்த நல்லம்பள்ளி தாலுகாவில் நெல்குந்தி என்ற மலைப்பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. ஸ்கேன் மிஷின் வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த மாவட்ட நலப்பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் காலை முதலே இவர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரை இவர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே கைதான இவர், ஜாமினில் வெளியே வந்து தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் கர்ப்பிணி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்றும், பெண் குழந்தையாக இருந்தால் அவற்றை கருக்கலைப்பு செய்துள்ளதும் தெரியவந்தது. இதற்கு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.13 ஆயிரம் வசூலித்து வந்துள்ளதும் தகவல் வெளியாகி உள்ளது.

முருகேசன் என்பவர் மருத்துவர் இல்லை என்றும் இவருக்கு கீழ் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முருகேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News