உள்ளூர் செய்திகள் (District)

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2022-07-19 10:30 GMT   |   Update On 2022-07-19 10:30 GMT
  • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்கள் பெறப்பட்டது.
  • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசா ரணை செய்துஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்டஅலுவல ர்களுக்கு வழங்க ப்பட்டு ள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்த ப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபு த்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புதிட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து த்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News