- எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.
- பேரூர்,பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, கிழக்கு பகுதி செயலாளர் ராஜி தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் கே.மதன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், முன்னாள் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கட்சியின் செய்தி தொடர்பாளரும், வக்கீல் பிரிவு இணை செயலாளருமான பாபு முருகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.
மேலும் தலைமைக்கழக பேச்சாளர்கள் கோவை புரட்சித் தம்பி, வெங்கட்ராமன் ஆகியோர் கூட்டத்தில் பேசினார்கள்.
இதில் ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர்,பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.