உள்ளூர் செய்திகள் (District)

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. இன்று மனிதச் சங்கிலி போராட்டம்

Published On 2024-10-08 05:35 GMT   |   Update On 2024-10-08 07:33 GMT
  • தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.
  • மனித சங்கிலி போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.

சென்னை:

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கள் முன்னாள் அமைச்சர் கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் இன்று காலை 10.30 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.

சென்னையில் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மாநகராட்சிக்குட்பபட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. ராயபுரம் எம்.சி. ரோடு சுழல் மெத்தை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் பங்கேற்று கை கோர்த்து நின்றனர்.

வில்லிவாக்கம், கொளத்தூர் உள்பட 7 இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு பங்கேற்றார். இங்கும் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே திரளான தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பகுதியில் மொத்தம் 14 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அண்ணாநகர் மண்டல அலுவலகம் அருகில் பகுதி செயலாளர் தசரதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திரண்ட அ.தி.மு.க. வினர் நீண்ட தூரம் மனித சங்கிலியில் கைகோர்த்து நின்றனர்.

சென்னை வால்டாக்ஸ் ரோடு மண்டல அலுவலகம் அருகில் நடைபெற்ற மனித சங்கிலியில் மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக் ள்ளிட்டோரும் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

மதுரவாயலில் பகுதி செயலாளர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அம்பத்தூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத் தில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் பங்கேற்றார். திருமங்கலத்தில் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் நடந்த மனித சங்கிலியில் வெங்கடேஷ் பாபு கலந்து கொண்டார்.

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 13 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 128-வது வார்டுக் குட்பட்ட விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் விருகை ரவி தொண் டர்களுடன் கலந்து கொண்டார்.

127-வது வார்டுக்கு உட்பட்ட கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலை 129-வது வார்டு அருணாசலம் ரோடு 136-வது வார்டு பிடிராஜன் சாலை, 137-வது வார்டு வெங்கட்ராமன் சாலை, 138-வது வார்டு அண்ணா மெயின் ரோடு, 139 ஜாபர்கான் பேட்டை ஜோன்ஸ் ரோடு, 140-வது வார்டு கோடம்பாக்கம் ரோடு மேட்டுப்பாளையம், 142 அண்ணாசாலை அம்மா பூங்கா அருகில் 168-வது வார்டு ஈக்காடுதாங்கல் அம்பாள் நகர், 169 சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவில் அருகில் 170-வது வார்டு கோட்டூர்புரம், 172-வது வார்டு ரேஸ்கோர்ஸ் ரோடு ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சைதை சுகுமார், ஷேட்அலி, சி.கே.முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


சென்னை புறநகர் மாவட் டத்தில் சோழிங்க நல்லூர், ஆலந்தூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மாவட்ட தலைமை அலுவலகம் அருகேயும் கந்தன்சாவடியில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் தொகுதி முழுவதும் 30 இடங்களில் ஆலந்தூர் தொகுதிக் குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்க ளில் நடந்தது. ஆலந்தூர் கிழக்கு பகுதியில் பகுதி செயலாளர் பரணி பிரசாத் தலைமையில் லேபர் கிணறு தெரு, நங்கநல்லூர் 4-வது பிரதானசாலை, ஆதம்பாக்கம் சக்தி நகர், நங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர். சாலை துர்கா பவன் அருகிலும், மீனம் பாக்கம் வ.உ.சி. நகர் ஆகிய இடங்களிலும் நடந்தது.

அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்ட செயலாளர்களும் இன்று தங்களது பகுதியில் மனித சங்கிலி போராட் டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள். அனைத்து மாநகராட்சி பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News