உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மீது டிராக்டர் மோதி விபத்து

Published On 2024-08-11 09:00 GMT   |   Update On 2024-08-11 09:00 GMT
  • டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சவுந்தர்யா (வயது20 )என்ற கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உத்தரப்பள்ளி-தம்மாண்டரப்பள்ளி பஸ் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாது.

இதில் கம்பைநல்லூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்திபன் (41), அவருடன் சென்ற உதவியாளர் சந்தியா (25), மூக்காண்டப்பள்ளியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

ஆம்புலன்சில் வந்த கர்ப்பிணி சவுந்தர்யாவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News