உள்ளூர் செய்திகள் (District)

ஓசூரில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2022-09-18 08:58 GMT   |   Update On 2022-09-18 08:58 GMT
  • ஓசூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  • ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடு தலைமை தாங்கினார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.சார்பில், ஓசூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடு தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத்தலை வர் வக்கீல் அன்வர் பாஷா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநகர கிழக்கு பகுதி செயலாளர் சாய் கிரண் வரவேற்றார்.

இதில், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ.ரோகிணி கிருஷ்ண குமார், மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் தரணி சண்முகம், தலைமைக்கழக பேச்சாளர் திருப்பூர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, டி.எஸ்.பாண்டியன், பொருளாளர் சிவகுமார், தேவராஜ் மற்றும், மாவட்ட,, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து தொண்டனர்.

முடிவில், மாநகர மேற்கு பகுதி செயலாளர் வீரைய்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News