உள்ளூர் செய்திகள் (District)

விக்கிரவாண்டி அருகே விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவர் சாவு

Published On 2023-07-10 07:04 GMT   |   Update On 2023-07-10 07:04 GMT
  • மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
  • சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். இதனையடுத்து கடந்த 5-ந்தேதி இரவு பேரணியில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேரணி கூட்ரோடு அருகே சாலையை கடந்தபோது சித்தணியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அருள்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து செஞ்சியை சேர்ந்த பச்சமுத்து (20), சதீஷ்குமார் (23) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆட்டோ டிரைவர் அருள்குமார் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News