உள்ளூர் செய்திகள்

மதுபானங்களை பதுக்கி விற்ற முதியவர் கைது

Published On 2023-05-19 06:34 GMT   |   Update On 2023-05-19 06:34 GMT
  • அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர்.
  • அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம், கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கொளத்தூரை சேர்ந்த அங்குபிள்ளை (வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News