உள்ளூர் செய்திகள் (District)
- விதமாக அவரது சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது
- கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி,
திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 77). இவர் வழக்கம் போல் காலையில் ஸ்டவ்வை பற்ற வைத்து பாலை சுட வைத்துள்ளார். பின்னர் கொதித்த பாலை இறக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது. இதையடுத்து ஆபத்தான நிலையில் திருச்சிஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.