உள்ளூர் செய்திகள்

பதக்கம் வென்ற மாணவர்களை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டினார்.

குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-12-31 09:45 GMT   |   Update On 2022-12-31 09:45 GMT
  • ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
  • 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளான ரேனுகா தங்க பதக்கம், தமிழ் அழகி வெள்ளி பதக்கம், பிரீத்தி வெள்ளி பதக்கம், அனிதா வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். மேலும், மாணவர்கள் ரிஃபாயின் கபூர் தங்க பதக்கம், சந்தோஷ் வெள்ளி பதக்கம், சூர்யா வெண்கலம் பதக்கம், ஜீவா வெண்கலம் பதக்கம், ஹரிஹரனன் வெண்கலம் பதக்கம், சஞ்சய் குமார் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர்.

பயிற்சியாளர் கிருஷ் ரத்தன் தலைமையில் சென்றனர். இவர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலர் ஜெயேந்திரன் வாழ்த்து கூறினர்.

Tags:    

Similar News