உள்ளூர் செய்திகள் (District)

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2023-04-30 06:04 GMT   |   Update On 2023-04-30 06:04 GMT
  • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
  • அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பருக்கல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் எழிலரசன் (வயது 43), தர்மராசு (33), சந்திரகாசன் (61), குமார் (45) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.




Tags:    

Similar News