உள்ளூர் செய்திகள்

சாலையில் சென்ற காரில் திடீர் தீ

Published On 2022-11-15 09:42 GMT   |   Update On 2022-11-15 09:42 GMT
  • சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
  • நண்பரை பார்த்து விட்டு சென்ற போது சம்பவம்

அரியலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் திரவுபதி அம்மன் ே காவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 42). இவர் தா.பழூரில் உள்ள நணபர் சந்தோஷ்குமாரை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அவரை பார்த்த பின்னர் மீண்டும் த ா.பழூரில் இருந்து சிதம்பரம் நோக்கி க ாரில் புறப்பட்டு சென்றார். கோடங்குடி அணைக்குடம் இடையே வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் சென்ற போது கார் திடீரென் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து பாலமுருகன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி உயிர் தப்பினார். சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் தா.பழூர் ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் வனப்பகுதி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News