உள்ளூர் செய்திகள் (District)

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

Published On 2023-04-05 07:08 GMT   |   Update On 2023-04-05 07:08 GMT
  • கோவில் கணக்கு கேட்டபோது தகராறு
  • அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது65). இவர் அப்பகுதியில் நாட்டார் ஆக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கோவில்கள் அருகில் மகாலிங்கம் பணி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் பூமிநாதன், கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல் ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு, அருகில் இருந்த கருங்கல்லால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயம் அடைந்த மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இச்சம்பவம் குறித்து மகாலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News