உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மீது மோதியதில் பலி

Published On 2023-05-23 06:10 GMT   |   Update On 2023-05-23 06:10 GMT
  • ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மீது மோதியதில் பலியானார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரது மகன் பாஸ்கர் (வயது 57). இவர் குழுமூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு காது குத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி பஸ்பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பாஸ்கர் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.

அருகில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கே இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் போலீசார் பாஸ்கரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News