உள்ளூர் செய்திகள் (District)

அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை-இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-05-11 06:40 GMT   |   Update On 2023-05-11 06:40 GMT
  • அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
  • மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும்.

அரியலூர்,

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கு இணையவழியில் வரும் 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரிகளின் பொறுப்பு முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர்களின் கைப்பேசி எண்கள் போன்ற விபரங்களை பதிவு செய்து, கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவு அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் தேசிய மாணவர்படை ஏ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இந்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்யவேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பித்தவர்களின் தர வரிசை பட்டியல் தயார் செய்த பின் மாணவ, மாணவிகளின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட கல்லூரி அலுவலகத்தை அணுக வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News