உள்ளூர் செய்திகள் (District)

உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை

Published On 2023-06-16 06:16 GMT   |   Update On 2023-06-16 06:16 GMT
  • உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்தார்
  • இந்திய வீராங்கனை சர்வாணிகாவை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிகா (வயது 8) என்ற மாணவி ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற மாபெரும் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்று உலகளவில் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சாதனை படைத்த இந்திய வீராங்கனை சர்வாணிகா தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்திய வீராங்கனை சர்வாணிகாவை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News