உள்ளூர் செய்திகள்
- டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது செய்யபட்டார்
- போலீசார் அவரிடமிருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கயர்லாபாத் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் பின்புறம், செட்டி குழி பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த பாலையா மகன் சக்திவேல் (வயது 37) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.