உள்ளூர் செய்திகள் (District)

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய டிரைவர்

Published On 2023-03-07 08:04 GMT   |   Update On 2023-03-07 08:04 GMT
  • துக்க நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி வந்த நிலையில் விபரீதம்
  • முந்திரி காட்டில் தொங்கிய பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லசாமி வேன் ஓட்டுநர். இவர் ராங்கியம் கிராமத்தில் இருந்து துக்க நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்திற்கு ஆட்களை ஏற்றி வந்ததுள்ளார்.துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மீண்டும் ஊருக்கு புறப்படும் போது வேன் ஓட்டுநரை காணவில்லை. இதனையடுத்து வேன் ஓட்டுநரை அனைவரும் தேடி வந்தனர். இதற்கிடையே அருகில் உள்ள முந்திரி காட்டில் ஒருவர் தூக்கில் பிணமாக கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்த போது துக்க நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றிவந்த நல்ல சாமி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்துஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் புண்ணியகோடி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News