உள்ளூர் செய்திகள் (District)

இளைஞர்களுக்காக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

Published On 2022-07-07 10:15 GMT   |   Update On 2022-07-07 10:15 GMT
  • இளைஞர்களுக்காக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
  • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்

அரியலூர்:

அரியலூர் செந்துறை சாலையில் எம்.பி. கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா தலைமையில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மலர்விழி, மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட திறன் அலுவலர் செல்வம், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், நகராட்சி தலைவர் சாந்தி, நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி, முன்னாள் நகர் மன்ற தலைவர் முருகேசன்,தா.பழுர் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், ஒன்றிய செயலாளர் சங்கர், மற்றும் பாலச்சந்தர், பிரபு, ஆகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சி மையத்தில் இலவச திறன் பயிற்சிகள், கல்வி ஆலோசனை சேவைகள், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது. இதனை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.





Tags:    

Similar News