உள்ளூர் செய்திகள் (District)
- 50க்கும் மேற்பட்டோர் வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர்
- 28 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டு குடும்பமாக வசிப்பதால் இட நெருக்கடியால் தவிப்பதாக குறிப்பிட்டு மனு
அரியலூர்,
ஜெயங்கொண்டம் கீழ அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, அரியலூர் ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேற்கண்ட ஊரில் இருந்து வந்திருந்த 50}க்கும் மேற்பட்டோர், அங்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி சந்தித்து அளித்த மனுவில், நாங்கள் 28 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட ஊரில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வீட்டில் வசிக்க முடியாத சூழல்நிலை ஏற்படடுள்ளது. எனவே ஆட்சியர் அவர்கள் மேற்கண்ட ஊர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.