உள்ளூர் செய்திகள் (District)

சவுதியில் இறந்த தந்தையின் உடலை மீட்டுத்தரக் கோரி மனு

Published On 2023-01-12 06:36 GMT   |   Update On 2023-01-12 06:36 GMT
  • சவுதியில் இறந்த தந்தையின் உடலை மீட்டுத்தரக் கோரி மனு அளித்தார்.
  • எனது தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:

செந்துறை அடுத்த சோழன்குடிகாடு , மணபத்தூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கவியரசன். இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், சௌதி அரேபியாவில் வேலைக்கு சென்றிருந்த எனது தந்தை ரவிச்சந்திரன், இறந்து விட்டதாக தொலைப் பேசி மூலம் தகவல் வந்தது. எனவே எனது தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News