உள்ளூர் செய்திகள் (District)
கீழப்பழுவூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- கீழப்பழுவூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கீழப்பழூவூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கீழப்பழூவூர், மேலப்பழூவூர், கோக்குடி, பூண்டி, வைப்பம், கருவடச்சேரி, கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9.30 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.