உள்ளூர் செய்திகள் (District)

பழூர், உடையார்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-11-20 06:55 GMT   |   Update On 2022-11-20 06:55 GMT
  • பழூர், உடையார்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
  • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் துணை மின் நிலையம், தழுதாழைமேடு துணை மின் நிலையம் மற்றும் நடுவலூர் துணைமின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தா.பழூர், சிந்தாமணி, கோடங்குடி, அணைக்குடம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, மதனத்தூர், தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர், சோழமாதேவி, இடங்கண்ணி, அருள்மொழி, திரிபுரந்தான், உதயநத்தம், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, வானதிரையன்குப்பம், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, உட்கோட்டை, வடக்கு/ தெற்கு-ஆயுதகளம், மெய்க்காவல்புத்தூர், கங்கைகொண்டசோழபுரம்.

இளையபெருமாள்நல்லூர், ஜெயங்கொண்டம், குறுக்கு ரோடு, கோட்டியால், சுத்தமல்லி, உல்லியகுடி, கொலையனுார், கார்குடி, பருக்கல், அணிக்குறிச்சி, நத்தவெளி, புளியங்குழி, காசாங்கோட்டை, முட்டுவாஞ்சேரி மற்றும் துணைமின் நிலையத்திற்கு அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாதாந்திர பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உடையார்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் உடையார்பாளையம், குமிழியம், பரணம், இரும்புலிகுறிச்சி, கழுமங்கலம், சோழங்குறிச்சி, இடையார், ஏந்தல், சூசையப்பர்பட்டினம், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, அழிசுகுடி, தத்தனூர், மணகெதி பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News