உள்ளூர் செய்திகள் (District)
வள்ளலார் முப்பெரும் விழா போட்டிகள்
- வள்ளலார் முப்பெரும் விழா போட்டிகள் நடந்தது
- 6-ந் தேதி பரிசளிப்பு விழா
அரியலூர்:
வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 26 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வரும் 6 ஆம் தேதி ரிதன்யா திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் உதவி ஆணையர் என்.நாகராஜ், கோயில் செயல் அலுவலர் எஸ்.சரவணன் மற்றும் வடலூர் வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.