உள்ளூர் செய்திகள்
டூவீலரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
- டூவீலரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ் ஐ பூபாலன் மற்றும் போலீசார் விளாங்குடி சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவளூர் வடக்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜரத்தினம்(20) விளாங்குடி அருகே டூவீலரில் சாக்குமூட்டையுடன் வந்த வரை போலீசார் தடுத்து நிறுத்தி மூட்டையை ஆய்வு செய்த போது ஹான்ஸ் 750 பாக்கெட்டுகளும்,சுமார் 13 கிலோ விமல் பாக்கும் எடுத்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ராஜரத்தினத்தை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.