உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த தென்னந்தட்டிக்கு தீவைப்பு

Published On 2023-06-05 08:54 GMT   |   Update On 2023-06-05 08:54 GMT
  • சவுந்தரராஜன் தனது வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.
  • தீ மளமளவென பரவி தென்னந்தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.

கடையம்:

கடையம் அருகே உள்ள மேட்டூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது53). பாத்திர வியாபாரி. இவரின் வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், தென்னந்தட்டிகள் மீது தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் தீ மளமளவென பரவி தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்ட சவுந்த ரராஜன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கடையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News