உள்ளூர் செய்திகள்

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா: கடலூர் மாவட்டத்துக்கு 6-ந் தேதி விடுமுறை

Published On 2023-01-04 08:20 GMT   |   Update On 2023-01-04 08:20 GMT
  • கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
  • 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேலும், உள்ளுர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் வெ ே 6-ந் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News