தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகள் ரூ. 24 லட்சத்திற்கு ஏலம்
- விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
- அரசுக்கு 36 ஆயிரத்து 584 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தருமபுரி,
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்தில் 48 விவசாயிகள் 3697 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.
விவசாயிகள் கொண்டு வந்திருந்த வெண்பட்டு கூடுகள் அதிகபட்சம் கிலோ 722 ரூபாயும் குறைந்தபட்சம் 473 ரூபாயும் சராசரி 659 ரூபாய் என மொத்தம் ரூ. 24 லட்சத்து 39 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனையானது.இதன் மூலம் அரசுக்கு 36 ஆயிரத்து 584 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.