உள்ளூர் செய்திகள் (District)
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில்திருட்டு
- சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
- பீரோ திறக்கபட்ட நிலையில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி அருகே உள்ள நம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது72). இவர் பொதுப்பணித்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வந்து பார்க்கும் போது பீரோ திறக்கபட்ட நிலையில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கோபிநாத ம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.