உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே விவசாயி மீது தாக்குதல்

Published On 2023-10-16 09:09 GMT   |   Update On 2023-10-16 09:09 GMT
  • சிதம்பரத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த ராமையா என்ற ராஜுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
  • துக்கம் விசாரிப்பதற்காக சிதம்பரம், ராமையாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது ராமையா, சிதம்பரத்தை அவதூறாக பேசி தாக்கினார்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு, பிள்ளையார் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது52), விவசாயி.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமையா என்ற ராஜுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலை யில் ராமையாவின் தந்தை சங்கரலிங்கம் இறந்து விட்டார்.

இதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக சிதம்பரம், ராமையாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது ராமையா, சிதம்பரத்தை அவதூறாக பேசி தாக்கி னார்.

மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதா கவும் மிரட்டினார். இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராமையாவை தேடி வரு கின்றனர்.

Tags:    

Similar News