உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், நந்தி பெருமான், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

சிவன் கோவில்களில் ஆவணி தேய்பிறை பிரதோஷ வழிபாடு

Published On 2022-08-25 09:03 GMT   |   Update On 2022-08-25 09:03 GMT
  • பரமத்திவேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்:

ஆவணி மாத பிரதோ ஷத்தினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதருக்கு ஆவணி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் உள்ள பானலிங்க விஸ்வேஷ்வரருக்கு ஆவணி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு நந்தியம்பெ ருமான், பானலிங்க விஸ்வேஷ்வரர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு பல வகை வாசனை திரவி

யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானமும் அருட்பிர சாதம் வழங்கப்பட்டது.

பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திரு வேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News