உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-02-22 09:33 GMT   |   Update On 2023-02-22 09:33 GMT
  • விழிப்புணர்வு நிகழ்ச்சி நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
  • கல்லூரி முதல்வர் பரஞ்சோதி முன்னிலை உரையாற்றினார்,

தருமபுரி, 

தருமபுரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. பென்னாகரம் வட்ட நுகர்வோர் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் சம்பத்குமார் வரவேற்று பேசினார்.

மருதம் நெல்லி கல்வி குழும தாளாளர் கோவிந்த் முதலைமை உரையாற்றினார்.ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பரஞ்சோதி முன்னிலை உரையாற்றினார்,

சிறப்பு அழைப்பாளர் களாக தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன், த.நூ.பா.சு. ஆராய்ச்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பழனி, தருமபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க தலைவர் அண்ணாமலை, தருமபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க உறுப்பினர் ஜீவாநந்தம், பெங்களூர் ராணுவ துறையை சேர்ந்த மாரிமுத்து, பொருளாளர் பென்னாகரம் வட்ட நுகர்வோர் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு சங்க பொருளாளர் மணிவண்ணன், பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலர் உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News