உள்ளூர் செய்திகள் (District)

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கண்தானம் செய்ய வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-24 08:49 GMT   |   Update On 2023-01-24 08:49 GMT
  • கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

நாகப்பட்டினம்:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் சார்பாக தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், கண் தானம் செய்ய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தொடக்கி வைத்தார். பேரணி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றது.

இறுதியில் பேரணியை திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முடித்து வைத்தார்.

பேரணியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மாகாந்தி, பண்டிதர் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தேச தலைவர்கள் வேடமிட்டு சென்றனர்.

கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.

முன்னதாக தேசிய கொடி ஏற்றியும், தேசபக்தி பாடல்கள் பாடியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்வி குழுமத்தின் இயக்குநர் விஜயசுந்தாரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்தரா மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News