உள்ளூர் செய்திகள் (District)

பாரத் மாண்டிசோரி மாணவிக்கு குற்றாலம் சென்ட்ரல் சுழற்கழகம் பாராட்டு

Published On 2022-07-26 09:09 GMT   |   Update On 2022-07-26 09:09 GMT
  • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
  • பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மரியம் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி நினைவு விருது வழங்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி அருணாச்சலம் ஹாலில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சென்ட்ரல் சார்பில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மரியம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி ஸ்ரீ செல்வநாயகம் பாப்பாத்தியம்மாள் நினைவு விருது மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கப்பரிசினை சுழற்கழகம் சார்பில் கர்னல் செல்வநாயகம் சம்சு வழங்கினார்.

சாதனை விருது பெற்ற மாணவி மரியத்தை பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர். குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரியின் தலைவர் ராஜகுலசேகர பாண்டியன், செயலாளர் பாபுராஜ், யூத் சர்வீஸ் தலைவர் பெல் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Tags:    

Similar News